Monday 29 April 2013

"தமிழும் சாதியும்"

தமிழ்:
     தமிழ் எனபது வெறும்  வார்த்தை அல்ல.10000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஒரு இனத்தின் மொழி, பண்பாட்டு அடையாளம்.தமிழர்கள்  என்ற ஒற்றை  குடையின்கீழ் இருந்த நம் சமூகம்,தமிழர் அல்லாதவர்களின் சுயநலன்களுக்காக நமது ஒற்றுமையை இழந்து,நமது நாடு இழந்து,நமது அடையாளங்களையும் இழந்து,நாகரிகம் என்ற போர்வையால் நமது கலாச்சாரத்தையும்,மொழியையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு இருக்கின்றோம்.
இனம்-அன்று:
           தமிழர்களின் ஆட்சி காலத்தில் சாதி என்ற சொல் வழக்கில் இருந்ததாக தெரியவில்லை.தமிழன் என்ற ஒரு குடையின்கீழ் சில தொழிற்சார்ந்த பிரிவுகள் மட்டுமே இருந்துள்ளது.அவர்கள் செய்த தொழில்கள் மற்றும் அவர்கள் இருந்த இடம் சார்ந்து சில பெயர்களால் அழைக்கப்பட்டனர்.இதில் எவரும் உயர்ந்தவரும் இல்லை,தாழ்ந்தவரும் இல்லை.அனைவரும் ஒற்றுமையை உணர்வுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
தமிழரின் வீழ்ச்சி:
தமிழரின் வீழ்ச்சி என்பது வடுகர்களின் படையெடுப்புகளுக்கு பின்பு தொடங்கியது.அது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்றுகொண்டிருக்கிறது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.
   “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
   நம்மில் ஒற்றுமை நீங்கினால்
   அனைவருக்கும் தாழ்வு”
- என்பது பழமொழி. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதை உணர்ந்து தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.அனால் தமிழர்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த வடுகர்கள் “நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு” என்பதனை நன்கு உணர்ந்து அதற்கான வேலைகளை செவ்வன செய்தனர்.
சாதி :
   வாழ்ந்த இடம் மற்றும் செய்த தொழில் சார்ந்து இருந்த பிரிவுகளை நிரந்தர பிரிவுகள் ஆக்கி அதில் ஏற்றத்தாழ்வுகளை புகுத்தினர்.இதனால் பன்னெடுங்காலமாய் நம் தமிழ் இனத்தின்  அடிப்படை ஆதாரமாய் இருந்த ஒற்றுமை உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் சரியத்தொடங்கியது.இன்று வரை தமிழர்களை ஆள்பவர்கள் வந்தேறி வடுகர்களின் வாரிசுகளான திராவிடர்களே.திராவிடர்களின் மூதாதையர்களான வடிகர்களால் கற்றுக்கொடுக்கப்பட்ட தமிழர்களை  பிரித்தாளும் சூழ்ச்சியை இன்றும் சிறப்பாக செயல்படுத்தி நம்மை ஆண்டு வருகின்றனர்.
நாளைய சாதிகள்:
     இன்று கிட்டத்தட்ட அனைத்தும் தொழிலையும் அனைவரும் செய்கின்றனர்.இன்று நம் சமுகத்தில் தொழில்ரீதியாக பொறியாளர்,மருத்துவர் என்று பலர் இருகின்றனர்.நாளையே பொறியாளர்,மருத்துவர் போன்றோர் உயர்ந்த சாதியினர்,பிற தொழில் செய்பவர்கள் தாழ்ந்த சாதியினர் என்ற அரசானை வந்தேறி வடுக வாரிசுகளால் பிரப்பிக்கப்டலாம்.இது முட்டாள்தனமான காரியமாக தெரியலாம்.ஆனால் நாகரிக சமூகம் என்று கூறிக்கொள்ளும் நாம், இந்த முட்டால்தனத்தைதான் பலநூறு வருடங்களாக செய்து வருகின்றோம் என்பதுதான் மிகவும் வருத்தப்படுக்கூடிய ஒன்று.
                  சிந்தித்து செயல்படுவீர் தமிழர்களே!!!!

No comments:

Post a Comment